WorldPlus WorldPlus
  • முகப்பு
  • செய்திகள்
  • சிறப்புக் கட்டுரை
  • புலனாய்வுச் செய்திகள்
  • காணொளிகள்
  • தொடர்பு
  • மேலும்
    • பல்சுவைகள்
    • திருகோணமலை
    • அம்பாறை்
    • சிறப்புசெய்திகள்
    • வேலை வாய்ப்புகள்
Go to...
Share :

குர்திஷ் இன மக்களும் புலிகளுடன் தான்: லண்டன் கூட்டத்தில் நடந்த சம்பவம்

விடுதலைப் புலிகள் இயக்கதை கண்டு நான் வியந்தது உண்டு என லண்டனில் நடைபெற்ற கூட்டத்தில் டாக்டர் மொகமெட் கயினி கூறியதுடன், விடுதலைப் புலிகளின் வீரத்தையும் பாராட்டியுள்ளார்.

விடுதலைப் புலிகளின் மதியுரைஞர் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் நினைவு நாளான நேற்று (14) லண்டனில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இதில் குர்திஷ் இன விடுதலைக்காக நீண்ட நாட்களாக, குரல் கொடுத்துவரும், Dr.Ibrahim, Dr.Mohammad Kayani, Dr.Ayar Ate ஆகிய 3 செயற்பாட்டாளர்கள், தமிழீழ செயற்பாட்டாளர்களோடு கலந்துரையாடியுள்ளார்கள்.

இதில் பிரபல ஊடகவியலாளர்கள், எழுத்தாளர்கள், மற்றும் விடுதலைக்கான செயற்பாட்டாளர்கள் பலரும் கலந்துகொண்டார்கள்.

1961ஆம் ஆண்டில் இருந்து குர்திஷ் இன மக்கள் ஆயுதம் ஏந்திப் போராடி தற்போது அரசியல் வழியில் தமது சுதந்திரத்திற்காக போராடி வருகிறார்கள்.

இந்த அனுபவங்களை அவர்கள் தமிழர்களுடன் பகிந்து கொண்டதோடு இனிமேல் என்ன செய்ய வேண்டும் என்பது தொடர்பாகவும் ஆராய்துள்ளார்கள்.

“விடுதலைப் புலிகள் இயக்கதை கண்டு நான் வியந்தது உண்டு” என்று கூறிய டாக்டர் மொகமெட் கயினி(முன்னாள் MP) விடுதலைப் புலிகளின் வீரத்தை பாராட்டியதுடன், எதிரிகளிடம் பிடி பட்டால் சயனைட் அடிப்பது என்பதனை கண்டு நான் வியந்துள்ளேன் என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பெண்களுக்கு விடுதலைப் புலிகள் சம உரிமையைக் கொடுத்திருந்தார்கள், தலைவர் பிரபாகரன் தமிழீழ பெண்களுக்கு பல தலைமை பதவிகளை கொடுத்தார் என்ற செய்தியையும் தமிழர்கள் வழங்கி இருந்தார்கள்.

பல ஆக்கபூர்வமான சமகால அனுபவங்களை இரு இனங்களும் பகிந்து கொண்டதோடு விடுதலை தொடர்பான விடயங்கள் பலவற்றை விரிவாக அலசி ஆராய்ந்தும் உள்ளார்கள்.

விடுதலைப் போரில் ஏற்படும் தடைகள், இனங்களுக்கு இடையேயான வேறுபாடுகள் தொடர்பாகவும் இந்த கூட்டத்தில் ஆராயப்பட்டது.

மேலதிக சந்திப்புகளை மேற்கொள்ளவும் தமீழீழ குழு ஒன்று குர்திஷ்தான் சென்று அங்குள்ள தற்காலிக அரசு பற்றி அறியவும் இனக்கப்பாடு ஒன்று எட்டப்பட்டுள்ளது.

தமிழர்களை பொறுத்தவரை நாம் சிங்கள ஆதிக்க சக்தியிடம் இருந்தே விடுதலை பெற முயற்சித்து வருகிறோம். ஆனால் குர்திஷ்தான், துருக்கி, ஈரான், ஈராக் போன்ற பல நாடுகளுக்கு மத்தில் இருக்கும் ஒரு தேசம்.

இந்த நாடுகள் அனைத்துமே குர்திஷ் இன மக்களை அடக்கி ஒடுக்கவே நினைக்கிறது. இத்தனை நாடுகள் போடும் தடையைக் கடந்து அவர்கள், ஒரு சுதந்திரத்தை பெறவேண்டும் என்று போராடி வருவது உலக அரங்கில் சுதந்திரத்திற்காக போராடி வரும் பல இனங்களுக்கு இவர்கள் ஒரு எடுத்துக் காட்டாக இருக்கிறார்கள் என்றால் அது மிகையாகாது.

எனவே இவர்கள் போன்ற அனுபவம் மிக்க, செயல்பாட்டாளர்களோடு தமிழர்கள் தொடர்புகளை பேண ஆரம்பித்துள்ளமை எமது விடுதலையை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் செல்ல உதவும் என இக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  

  





Follow us

Facebook

மரண அறிவித்தல்


சின்னத்தம்பி வேலாப்போடி
பிறப்பு: 04-02-1939
இறப்பு: 15-03-2018
இடம்:
அரசடித்தீவு

சகாதேவராஜா நேசறஞ்சினி
பிறப்பு: 29-10-1964
இறப்பு: 14-12-2017
இடம்:
காரைதீவு

நினைவஞ்சலிகள்

Ads

About Us

அன்பான வாசகர்களே, உங்கள் பிரதேசங்களில் நடக்கும் செய்திகளையும், நிகழ்வுகளையும் மற்றும் நீங்கள் செய்தியாளராயின் உங்களிடத்தில் இருக்கும் செய்திகளை Battinaatham செய்தித் தளத்தில் பிரசுரிக்க எமது மின்னஞ்சலுக்கு info@battinaatham.com அனுப்பி வைக்கவும். மின்னஞ்சல் அனுப்பும் போது உங்கள் பெயர், நாடு, தொலைபேசி என்பவற்றை குறிப்பிட மறக்க வேண்டாம்.

சிறப்புக் கட்டுரைகள்

  • கிழக்குத் தமிழர் ஒன்றியம் கரைசேருமா?.....
  • தமிழ்தேசியகூட்டமைப்பு மட்டக்களப்புமாவட்டத்தில் உள்ளூராட்சிசபையின் பார்வை
  • நாடகத்தின் நாடகம்
  • ஏதோவொரு முடிவுக்கு வர வேண்டும் முஸ்லிம்கள்!

      battinaadham news is Leading news portal for tamil likers, especially it carries a Booming articles,Investigation Research battinaadham news,batti news,Batticaloa news,langkasri,tamilwin,hirunews,jvpnws,ibctamil,bbctamil,eastern province virakesari,Amparai news,trincomalee news, News, videos, Audio's and interesting event updates all flash news Battinaatham Srilanka news, breaking news and feature stories. Read it,Share it and Post Comments
      If you are wide Share person regarding any events in the four edge of country or county, and you like to post in any news portal. We encourage your sharing and you can send to info@battinaatham.com and we will relay through Battinaatham News Portal.Make ensure while sending mail mention your Name,Country,Contact Number to assist further.

© Copyright 2017 Battinaatham